கோயிலின் வேறு பெயர்
அங்காள அய்யன், ஒச்சாண்டம்மன், பொன்னாங்கன்
அமைவிடம்
கருமாத்தூர் ஊருக்கு வடக்கேயுள்ளது.
தலத்தின் சிறப்பு
இப்பகுதியில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்குக் குலதெய்வமாகவுள்ளது.
ஊர்
கருமாத்தூர்
மாவட்டம்
மதுரை
மாசி,பங்குனி, மார்கழி, ஆடி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இங்கு மாசிப்பச்சைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பொன்னாங்கன் வழிவந்த உலகநாதனை மணக்க விரும்பிய ஒச்சாண்டம்மன் என்ற பெண் தெய்வத்தின் பெயரால் இக்கோயில் ஒச்சாண்டம்மன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது.
கருவறை கிழக்குப் பார்த்து உள்ளது. 21 பரிவாரத் தெய்வங்களுக்கு தனித்தனியே அறையும், பீடமும் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலில், மொத்தம் 42 தெய்வங்கள் உள்ளன. தனது வம்சாவளிகள் சிதறிப்போகாமல் இருக்க, அவர்களுக்குச் சாமியில் பங்கு கொடுத்து, உரிமையாக இணைத்துக்கொண்டு, இனக்குழுப் பெருக்கத்திற்கேற்பப் பரிவாரத் தெய்வங்களின் பெருக்கமும் இருக்கிறது. இங்குப் பல சிறு சந்நிதிகள், கொடிமரம், வழிபாட்டுத் தூண், யானைவாசல், குதிரைவாசல் மற்றும் தனிச் சிற்பங்கள் உள்ளன.
முனைவர் இரத்தினகுமார்
கொங்கர்புளியங்குளம், கிண்ணிமங்கலம்,திடியன் கோயில்.
கருமாத்தூர் - உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் வடக்குப்பக்கம் அமைந்துள்ளது.
செக்கானூரணி
உசிலம்பட்டி
மதுரை