வகை
கிராமக் கோயில்
திருவிழாவின் பயன்
வேளாண்மைத் தொழில் மேம்படுதல். அந்த ஆண்டில் ஊர் மக்களுக்குள் இருந்த இடைவெளி, பகை, முரண், சாதி வேறுபாடு அனைத்தும் இவ்விழாவில் களையப்படுகின்றன. மதுகுடித்தவர் இவ்விழாவில் பங்கேற்றால் நோவு கண்டு இறப்பர் என்றும், சண்டை சச்சரவில் ஈடுபட்டால் அவருக்கும் ஆபத்து வரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். அதனால் என்ன நடந்தாலும் அனைவரும் நல்லிணக்கமாகப் பேசி முத்தையாவை வணங்கி உணவருந்திச் செல்கின்றனர்.
நடைபெறும் இடம்
பெருமாள்பட்டி கண்மாய்க் கரை அருகே உள்ள பாறையில் நடைபெறுகிறது.
நடைபெறும் தருணங்கள்
வைகாசி மாதம்
ஊர்
சொரிக்காம்பட்டி
மாவட்டம்
மதுரை